சென்னை கணக்குத் தேர்வுக்கு பயந்து ப்ளஸ் 2 மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். ப்ளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முக்கியப் பாடங்களின் தேர்வுகள் நடந்து வருகின்றன. இன்று கணிதப் பாடத் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், கணிதப் பாடத் தேர்வில் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சென்னை திரிசூலத்தில் 12ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Popular Categories



