புது தில்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60இல் இருந்து 120 ஆக அதிகரிப்பது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில், ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60லிருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில்வேயில் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 -ல் இருந்து 120 நாட்கள் திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பயணியர் ரயில்களில் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், 5 நிமிடங்களில் எளிதாக டிக்கெட் எடுக்கும் திட்டம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் முன்பதிவு நாள் நீட்டிப்பு ஏப்ரல் 1 முதல் அமலாகிறது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

