புது தில்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60இல் இருந்து 120 ஆக அதிகரிப்பது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில், ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் நாட்கள் 60லிருந்து 120 நாட்களாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில்வேயில் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 -ல் இருந்து 120 நாட்கள் திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பயணியர் ரயில்களில் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், 5 நிமிடங்களில் எளிதாக டிக்கெட் எடுக்கும் திட்டம் விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular Categories



