நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த கண்ணதாசன்(57), படை வீரர்கள்களுக்கு சீருடை தைக்கும் பணியில் இருந்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீலதா(48), மகள் வைஷ்ணவி(19), மகன் ஆனந்த் விஷ்ணு(16), அவர்களூக்கு அருகே வசித்த விஜயகுமார் (60), அவரது மனைவி் ராஜலட்சுமி(47) ஆகியோர் காரில் கொல்லிமலை சென்றனர். காரை ஆவடியைச் சேர்ந்த சித்தார்த் (32) ஓட்டியுள்ளார். கொல்லிமலை அருகே அரியூர்நாடு பெரியசாமி கோயிலுக்கு சனிக்கிழமை இன்று மதியத்துக்கு மேல் சென்று சாமி கும்பிட்டு மாலை 6 மணி அளவில் மலையை விட்டு கீழே இறங்கினர். புறப்பட்ட சற்று நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கண்ணதாசன், ஸ்ரீலதா, வைஷ்ணவி, விஜயகுமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் விஷ்ணு, ராஜலட்சுமி, சித்தார்த் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொல்லிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொல்லிமலை அருகே கார் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

