நெல்லை: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அடுத்த மைபாறையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65), இவரது மனைவி தனலட்சுமி (55), தனலட்சுமியின் தம்பி முத்தாள்வார். இவருக்கும் சகோதரி தனலக்ஷ்மியின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பான முன் பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றும் சகோதரி கணவனிடம் இதுக் குறித்து முத்தாள்வார் தகராறு செய்துள்ளார். தகாராறு முற்றியதில் முத்தாள்வார் சகோதரியையும்,அவரது கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். உயிருக்கு போராடி சிறிது நேரத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஜெயராமன், தனலட்சுமி இருவரும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்துத் தகராறில் இரட்டைக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
சங்கரன்கோவில் அருகே இரட்டை கொலை: அக்கா, அத்தானை கொன்று மைத்துனன் தப்பி ஓட்டம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

