சென்னை: வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை ஆம் ஆத்மி கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் விட்டின் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப் பட்டது. வீட்டின் சுவரைத் தாண்டி வீட்டுக்குள் செல்ல ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் ஓ.பி.எஸ் வீடு முற்றுகை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது
Popular Categories


