சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், அவரது திருமணத்துக்கு உதவிய நண்பர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு, சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மோகன் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் மகளான 5 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த 14 வயதுச் சிறுமியை தனக்கு கல்யாணம் செய்து தருமாறு மோகன் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது மகளை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் சேலம் அருகில் உள்ள அதிகாரப்பட்டிக்கு சென்றார். அப்போது, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் மாப்பிள்ளை கோலத்தில் மோகனும், அவரது நண்பரும் இருந்துள்ளனர். அங்கே கோவிலில் வைத்து மோகனுக்கும் அந்தச் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் குறித்து இரு வீட்டாரின் தரப்பில் உறவினர்கள் எவருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். பின்னர் மோகன் அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு பெரிய வீராணம் பகுதிக்கு வந்து குடியேறினார். இந்நிலையில், சிறுமியை மோகன் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சேலத்தில் உள்ள அன்பு இல்ல நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். அவர்களின் புகாரின் பேரில், சேலம் காவல் ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து விசாரிக்க அம்மாபேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணையில் குழந்தை திருமணம் நடந்துள்ளது உறுதியானது. இதையடுத்து 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்துக்காக ஆட்டோ டிரைவர் மோகனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். இதை அறிந்து, சிறுமியின் தாயார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 min.Read
14 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நண்பருடன் கைது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

