சென்னை: சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு தமிழர்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர். ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ&யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

