லாலு கட்சியின் அலுவலக வாடகை ரூ.333 மட்டுமே!

Published:

புது தில்லி: லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்துக்கான வாடகை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கேட்டிருந்தார். இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதியில் இருந்து வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது. 2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாத வாடகை ரூ.333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம் 2008-ல்; தில்லியில், கட்சிக்கென தலைமையகமாக 3 மாடிகள் கொண்ட ராப்ரி பவனைக் கட்டியுள்ள போதும் வி.பி.ஹவுஸ் கட்டட அலுவலகத்தையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது. லாலு கட்சியின் அலுவலக வாடகை ரூ.333 மட்டுமே! புது தில்லி: லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்துக்கான வாடகை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கேட்டிருந்தார். இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதியில் இருந்து வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது. 2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாத வாடகை ரூ.333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம் 2008-ல்; தில்லியில், கட்சிக்கென தலைமையகமாக 3 மாடிகள் கொண்ட ராப்ரி பவனைக் கட்டியுள்ள போதும் வி.பி.ஹவுஸ் கட்டட அலுவலகத்தையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img