December 5, 2025, 1:54 PM
26.9 C
Chennai

சென்னையில் விடிய விடிய கனமழை! 2017க்குப் பின் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அளவு!

chennai-rain2
chennai-rain2

வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த முதல் நாளிலேயே  சென்னையில் மழை கொட்டி தீர்த்தது 

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேகமூட்டமாகவும் சில நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

chennai-rain1
chennai-rain1

நள்ளிரவில் வெகு நேரம் நீடித்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. சுரங்கப்பாதைகள் பலவற்றில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து அந்தப் பகுதிகளில் முற்றிலும் முடங்கிப் போனது. மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை நகரின் பல பகுதிகளிலும் மக்கள் கவனத்துடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ மழை அளவு படி சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது செங்குன்றம் பகுதியில் 128 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு படி சென்னை நகரில் நவம்பர் 2017 க்கு பிறகு பெய்த அதிகபட்ச மழை அளவு இது தான் என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories