சுயலாபத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தார் ஜெயலலிதா என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கே.என். நேரு பேசினார். அந்தத் கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில், சுயலாபத்திற்காக நிலம் கையகபடுத்தும் மசோதாவை ஜெயலலிதா ஆதரித்தார். மேலும் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை உள்ளது என பேசினார். அதனை தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் உத்ராபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிலம் கையகபடுத்தும் மசோதாவை சுயலாபத்திற்காக ஆதரித்தார் ஜெயலலிதா: கே.என்.நேரு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

