திருமணமாகி ஒரே வாரம்.. உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

Gobi Maheswari - 2026

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபி(35), ஆலந்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (35) இருவருக்கும் கடந்த மாதம் 14ஆம் தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கோபி ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது கணவரை இழந்த மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளளது.

வழக்கம்போல் நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். எனினும் ஆத்திரம் அடங்காத கோபி மனைவியை கொலை செய்துள்ளார்.

அதாவது, நள்ளிரவு 12 மணியளவில் தூங்கி கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி துடிதுடித்து இறந்துள்ளார். பின்னர் மனைவியின் உடலுடன் தனியாக இருந்த கோபி பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் மணவாள நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

அப்போது மனைவியை கழுத்து அறுத்து கொன்றுவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சரணடைந்த கோபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories