சந்தேகம்.. அடித்து உதைத்தக் குடிகார கணவன்! தம்பியுடன் சேர்ந்து சிலிண்டரால் தலையைப் பிளந்த மனைவி!

murder-1
murder-1

குடிகார கணவனை தம்பியுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மைலாப்பூரில் உள்ள பட்டுநூல்காரன் தெருவைச் சேர்ந்தவர் கபாலி (48). அவருக்கு வனிதா (42) என்ற மனைவியும், ஒரு மகனும், மக்களும் உள்ளனர்.

வீடுகளுக்கு பெயிண்ட் அடிப்பது, வெல்டிங் போன்ற வேலைகளைப் பார்த்து வந்த அவர், சனிக்கிழமை தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சொந்தக்காரப் பெண்
முத்துலட்சுமி போலிஸில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலிஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

மேலும் அவரது உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து, பல்லாவரத்தில் தனது தாயின் வீட்டில் இருந்த மனைவி வனிதாவை அழைத்துவந்து போலிஸ் விசாரணை செய்தனர்.

அப்போது, அவர் கொடுத்த வாக்குமூலம் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. தனது கணவன் தன்னை நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்துவந்ததாகவும், ஒரு கட்டத்தில் கொடுமையை பொறுக்கமுடியாமல் தனது தம்பியுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று (வெள்ளிக்கிழமை) இரவு திட்டமிட்டபடி தனது தம்பி சாந்தகுமாரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது கபாலிக்கும் சாந்தகுமாருக்கும் சண்டை முற்றியுள்ளது.

தனது அக்காவை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட சாந்தகுமார், பின்னர் அங்கு இருந்த சமையல் சிலிண்டரை தூக்கி கபாலியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு வந்துள்ளார். இதனை மொத்தமாக போலிஸில் ஒப்புக்கொண்டார் வனிதா.

இந்நிலையில், வனிதா மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸ் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்திவருகிறது.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில், கபாலி தலையில் மிக கனமான அடி விழுந்ததால், உள்ளுக்குள் மூளை சிதறி, கண், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து இரத்தம் வெளியேறி இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories