December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

கவர் கோல்ட் வின்னர்.. உள்ள பாமாயில்! ஏமாற்றிய நிறுவனம்.. சீல் வைத்த அதிகாரிகள்!

gold winner
gold winner

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்யை மொத்தமாக வாங்கி அவற்றை சிறிய 100 கிராம் முதல் ஒரு லிட்டர் வரையிலான பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்து வந்தனர்.

அதனைக் கடைகளுக்கு விற்பனைக்குப் போட்டு வரும் தனியார் நிறுவனம், சில்வர் கோல்ட், சன்ஃபிளவர் ஆயில் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாக அனுமதி பெற்றுள்ளனர்.

சூரியகாந்தி எண்ணெய்யை மட்டும் விற்பனை செய்வதாக அனுமதி வாங்கிய நிறுவனம், கோல்டு வின்னர் நிறுவனத்தின் பாக்கெட்டுகளை அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக தயாரித்து, அதில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை நிரப்பி சூரியகாந்தி எண்ணெய் என்று கூறி கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த எண்ணெய்ப் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் இடங்களில் இருந்து தொடர்ந்து பல புகார்கள் வந்ததை அடுத்து எண்ணெய்யில் தரம் இல்லை என்றும், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த எண்ணெய்யைப் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் இன்று திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு அந்த எண்ணெய் நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டார்.

அப்போது அங்கு சூரியகாந்தி எண்ணெய் நிரப்பப்பட வேண்டிய பாக்கெட்டுகளில் பாமாயில் நிரப்பப்பட்டு பேக்கிங் செய்வதைக் கண்டு அனைத்து பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த அவர், பேக்கிங் செய்ய வைத்திருந்த 5,400 லிட்டர் பாமாலையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கோல்டு வின்னர் நிறுவனத்தின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி சமைக்கும் சமையல் சூரியகாந்தி எண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலை பயன்படுத்தியதற்காக அதிகாரிகள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அந்த நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories