வேலைப்பார்த்த வீட்டு இளம்பெண்ணின் போட்டோவை அனுப்பி இளைஞரை மயக்கிய பாட்டி!

whatsapp
whatsapp

வேறோரு பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி அந்த பாட்டி செய்த அட்டுழியம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கால் ஒன்று வந்துள்ளது. முதலில் யார் பேசுவது என்று தெரியாமல் பேச ஆரம்பித்த அவர், அதில் பேசிய பெண்ணின் அழகான குரலுக்கு மயங்கியுள்ளார். இதனால் அவர் அந்த பெண்ணிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சில நாட்கள் கடந்த நிலையில், தனது அழகான புகைப்படத்தை அனுப்புமாறு அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதனால், அந்த பெண்ணும் தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய போது அவரது குரல் மட்டும் இல்லாமல் அவரும் பேரழகு என்று அந்த இளைஞர் அந்த பெண்ணை தீவிரமாக காதலிக்க தொடங்கினார்.

மேலும், தான் திருமணம் செய்தால் இந்த பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று அந்த இளைஞன் அவரது குடும்பத்தினரிடம் கூறியதால் தனது மகன் ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதனால், நாம் நேரில் சென்று பெண்ணின் பெற்ரோரிடம் முறைப்படி பேசி திருமணம் நிச்சயம் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன் படி, அந்த இளைஞர் அந்த பெண்ணின் முகவரியை தேடிக் கண்டுபிடித்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரில் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் கொடுத்த முகவரியில், சுமார் 65 வயதான மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். முதலில், அந்த இளைஞர் அவர் தனது காதலியின் பாட்டியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார். பின்னர், அந்த மூதாட்டியிடம் அவர் பேசிய பிறகு தான் தான் ஏமாற்ற பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், தனக்கு செல்போனில் அனுப்பப்பட்ட படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால படம் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்னர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும், இளம்பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இதுபோல் அவரிடம் வேறு யாரும் ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த பதிவில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால புகைப்படம் கிடையாது,

அது தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படம் என்று கூறி, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், மூதாட்டி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி, பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டில் உள்ள இளம்பெண்ணின் படத்தை வாட்ஸ்-அப்பில் இளைஞருக்கு அனுப்பி ஆசையாக பேசியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூதாட்டியை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பிய நிலையில், சமூக வலைதளத்தில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories