December 6, 2025, 7:12 AM
23.8 C
Chennai

ஆன்லைனில் பழகி பெண்களுடன் உறவு.‌. அதிகாரி சஸ்பென்ட்!

anand
anand

கோவை உப்பிலிபாளையத்தில் வசிக்கும் 47 வயது பெண் தொழில் முனைவர் ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கணவரை பிரிந்து வாழும் தமக்கு ஆன்லைன் டேட்டிங் மூலம் சென்னை முகப்பேர் கிழக்கில் வசிக்கும் 49 வயது ஆனந்த் நண்பராக அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.

மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறிய ஆனந்த் பெண் தொழில் முனைவரை திருமணம் செய்ய முன்வந்ததால் இருவர் இடையே நெருக்கம் அதிகரித்தது.

கடந்த செப்டெம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ஆனந்த் பெண் தொழில் முனைவர் சந்தித்துள்ளார்.

அப்போது தம்மை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்காக ஆனந்தைக் கடிந்துகொண்ட போது 13 ஆண்டுகளாக தமது மனைவியுடன் தொடர்பு இல்லாததால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தவறு இழைத்து விட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரினார். அது வெறும் நடிப்பு என்பது தமக்கு பின்னர் தான் தெரிய வந்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை போன்றே பிற பெண்களுடன் ஆனந்த் இருந்த தொடர்பை அந்த பெண் அம்பலப்படுத்தியுள்ளார். பிசினஸ் விசிட் என்ற பெயரில் வெளியிடங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு வெவ்வேறு பெண்களுடன் ஆனந்த் வலம் வந்தது தொடர்பான ஆவணங்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

அந்த பெண்களும் ஏதோ ஒரு வகையில் கணவரை பிரிந்து வாழ்வபர்கள் தான் என்றும் கோவை பெண் கூறியுள்ளார்.

ஆனந்த் மோசடி வலையில் வீழ்ந்த பெண்கள் யார்யார் என்ற விவரமும் போலீசுக்கு கிடைத்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து ஆனந்த் அரங்கேற்றிய காதல் விளையாட்டுகள் குறித்து மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை பெண்ணின் புகாரை அடுத்து செயல் அதிகாரி பதவியில் இருந்து ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை தீவிரமடைந்து இருப்பதால் ஆனந்த் சிக்கல் மேலும் வலுத்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories