தங்க சங்கிலி: தூய்மை பெண் பணியாளர் எரித்துக் கொலை!

revati - 2026

கை,கால்களை கட்டி போட்டு பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நொளம்பூர் காவல்துறையினருக்கு பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் பிணத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த இடத்தில் கிடந்த ஒரு பையை சோதனை செய்த போது, எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சக்தி சாய்ராம் நகரில் வசிக்கும் முருகனின் மனைவி ரேவதி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேவதியுடன் வேலை பார்க்கும் குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோ டிரைவராக பணிபுரியும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திம்மப்பா என்பவருடன் ரேவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி விட்டது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இந்நிலையில் ரேவதி அடமானம் வைப்பதற்காக தனது 5 பவுன் தங்க சங்கிலியை திம்மப்பாவிடம் கொடுத்துள்ளார்.

thimappa - 2026

இதனையடுத்து நொளம்பூர் சர்வீஸ் சாலையில் இருக்கும் காலி இடத்தில் வைத்து திம்மப்பாவும், ரேவதியும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அடமானம் வைப்பதற்காக கொடுத்து 5 பவுன் தங்க சங்கிலியை மீட்டு தரும்படி ரேவதி அவரிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது இங்கு சத்தம் போட வேண்டாம் மறைவாக போய் பேசலாம் என்று கூறி திம்மப்பா ரேவதியை முட்புதருக்குள் அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின் ரேவதி எதிர்பார்க்காத சமயத்தில் திம்மப்பா துணியை அவரின் வாயில் வைத்து அமுக்கி, ரேவதியின் துப்பட்டாவால் அவரது கை, கால்களை கட்டியுள்ளார்.

இதனையடுத்து திம்மப்பா தான் வைத்திருந்த கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்ததால் அவர் மயங்கி விட்டார். அதன் பின் திம்மப்பா ரேவதி உயிரோடு இருக்கும் போதே அவரை எரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மேலும் திம்மப்பாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories