போதை பொருள் கடத்தி மாணவர்களுக்கு விற்பனை! இயற்கை ஓவிய கலைஞர்கள் கைது!

Drug trafficking - 2026

பிறந்த நாள் பரிசு’ என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொரியர் பார்சலில்போதை மாத்திரைகள் வரவழைத்த ஓவியக் கலைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை பழைய விமான நிலையத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த கொரியா் பாராசல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

drug Abduction - 2026

அப்போது புதுச்சேரி மாநிலம் ஆரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. உள்ளே பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பார்சலில் 994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சமாகும். இதனை தொடர்ந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.

drugs 1 - 2026

இதனையடுத்து அந்த பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோந்த ரூபக் மணிகண்டன்(29), லாய் விகூஸ்(28) ஆகிய 2 பேர் இருந்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர்.

அங்கு இரு பார்சல்களில் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

drug - 2026

விசாரணையில் அந்த இளைஞர்கள் இருவரும் இயற்கை ஓவிய கலைஞா்கள் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் இதேபோல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்தும் கஞ்சா போதைப்பொருளையும் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் சுங்கத்துறை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் சென்னை ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories