வலைதளம் மூலம் கொலை மிரட்டல்! ஜிபி முத்து மீது காதல் சுகுமார் புகார்!

Kadhal sukumar
Kadhal sukumar

சமூக வலைத்தளங்களில் ரவுடி பேபி சூர்யா, இலக்கியா, ஜி.பி.முத்து போன்றவர்கள் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கினால் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் ஆன்லைன் வழியாகவே கல்வி பயில்வதால் மாணவர்கள் எப்போதும் இணையதளங்களில் மூழ்கி இருக்கின்றனர்.

அவர்களின் பார்வைக்கு இந்த ஆபாச வீடியோக்கள் வந்துவிடுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி சீரழிகிறது என்று பலரும் ரவுடி பேபி சூர்யா, ஜி. பி. முத்து, இலக்கிய உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையே காதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் ‘காதல்’ சுகுமார் ஊடகங்களில் சொல்லி வந்தார்.

மேலும் காதல் சுகுமாரின் நண்பரும் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளருமான ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து ஊடகங்களிலும் தெரிவித்திருக்கிறார் காதல் சுகுமார்.

ஊடகங்களில் காதல் சுகுமார் சொல்லியது தொடர்பாக நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி. பி. முத்து ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக காதல் சுகுமாருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்கள்.

இதையடுத்து நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் காதல் சுகுமார்.

அந்த புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜி.பி. முத்து, சேலம் மணி, நெல்லை சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆபாசங்கள் நிறைந்து இவர்களின் சமூக வலைதள பக்கங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories