சென்னை: சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை பாலம் அருகே, சி.பி.ராமசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்தவுடன் ரசீது வரும் இடத்தில் குறி வைத்து இரும்புக் கம்பியால் உடைத்ததில் ஏ.டி.எம். இயந்திரத்தின் மேல் பகுதி லேசாக உடைந்துள்ளது. இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாதது தெரிய வந்தது. இதனைப் பயன்படுத்தியே கொள்ளையர்கள் துணிச்சலுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

