இன்னும் தொடங்கவே இல்லை.. அதற்குள் முடிவதா..? வெளிநாட்டில் இருந்து ஆசையோடு வந்த இளைஞர்..!

Trichy airport 1 - 2026

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று 5 வருடம் கழித்து மனைவி, குடும்பத்தினரைப் பார்க்க வந்தவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பயணம் செய்தார். விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

பயணிகள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளிவந்தனர். ஆனால் வேல்முருகன் மட்டும் சீட்டிலே தலையை சாய்ந்தவாறு கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறார். விமான நிலைய ஊழியர்கள் அவரிடம் சென்று பார்த்த போது உடல் அசைவின்றி இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவர் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். விமானத்திற்குள் வந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

vel murugan
vel murugan

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் வேல்முருகனின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இதுகுறித்து அறிந்த விமான நிலைய காவல் துறையினர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டி.. இங்கு வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் வேல்முருகன்.. 36 வயதாகிறது.

கடந்த 2017-ல் இவருக்கு நிஷாராணி என்பவருடன் திருமணம் நடந்தது.. ஆனால், திருமணமான, 2 மாதத்திலேயே மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது.

Velmurugan 1
Velmurugan 1

மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் ரவிராஜ் ஆகியோர் மலேசியாவில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளனர்.. அந்த கடையில்தான் வேல்முருகன் வேலைக்கு சென்றார்
.. 5 வருடங்கள் அங்கு சலூனில் வேலை பார்த்து வந்துள்ளார்..

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வேல்முருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது..

இந்நிலையில் வேல்முருகனுக்கு ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்ப வேல்முருகன் முற்பட்டபோது,

ஓனர் ரவி என்பவர் இறந்துவிடவும், அவரது மகன் ரவிராஜ்தான் அந்த கடையை எடுத்து நடத்தி உள்ளார்.. அந்த ஊரில் சலூன் கடையில் வேறு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால், வேல்முருகனை சொந்த ஊருக்கும் அனுப்பாமல், அதே கடையில் தொடர்ந்து வேலை பார்க்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.. இதனால் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது.. கடையில் ஆள் இல்லை. நீங்கள் தான் வேலை பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கியிருக்கிறார்கள்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
ambulance 1
ambulance 1

வேல்முருகனைத் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை என்பதை தெரிந்துகொண்டவர் நடந்தவற்றைத் தனது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார். அவர்களும் பதறிப்போய், “தம்பி நமக்குப் பணம் முக்கியம் இல்லப்பா, நீ எப்படியாவது ஊருக்கு வந்திருப்பா” என்று சொல்லி அவர்களே டிக்கெட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

அவரும் ஒருவழியாகத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மலேசியாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏறி வந்தபோது நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். அதன் பிறகு தான் நாங்கள் இங்கு வந்தோம்” என்று தழுதழுத்தார்கள்.

“ஐந்து வருடமா குடும்பத்தைப் பிரிந்து இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல குடும்பத்தை பார்க்கபோறேன்னு சொல்லிவிட்டு கிளம்புனியேப்பா. இன்னைக்கு செத்து பிணமா வந்திருக்கியேன்னு” அவரது மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறும் சத்தம் காண்போரைக் கண்கலங்க வைத்துவிட்டது.

mrs Velmurugan
mrs Velmurugan

5 வருடமாக குடும்பத்தை பார்க்கவில்லை, இன்னும் 2 நாளில் வந்து எல்லாரையும் பார்த்துவிடுவேன் என்று வேல்முருகன் போனில் சொல்லி கொண்டே இருந்தாராம்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. அதுமட்டுமல்ல, வேலைக்கு அழைத்து சென்றவர்கள், உழைப்பை மட்டும் இப்படி உறிஞ்சிக் கொண்டு, உடம்பு சரியில்லாதவருக்கு சிகிச்சைகூட தராமல் இருந்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories