நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க 11இடங்களில் குறை தீர்க்கும் முகாம் நடக் கிறது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை, ஒவ்வொரு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான குறை தீர்க்கும் முகாம் நடத்தப் படுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 14ம்தேதி அந்தந்த தாலுகாவிற் குட்பட்ட கிராமங்களில் ரேஷன் கார்டுகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கும் கிராமத்தின் விவரம் வருமாறு: நெல்லை-சீதபற்பநல் லூர், பாளையங்கோட்டை- திடியூர், சங்கரன்கோவில் -புன்னைவனம், தென்காசி – சங்கனாப்பேரி, செங்கோட்டை – இலத்தூர், சிவகிரி – ஏ.சுப்பிரமணியபுரம், வீ.கே.புதூர் – குறிஞ்சான்குளம், ஆலங்குளம் -மடத்தூர், அம்பாசமுத்திரம் – நாலுமுக்கு, நாங்குநேரி – வடுகச்சிமதில், ராதாபுரம் – தணக்கர்குளம். இந்த முகாம்களில் அந்தந்த வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளித்தல் போன்ற ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து குறைகளுக்கும் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

