நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் வெற்றி

Published:

nithish-kumar பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 140 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் நிதிஷ் குமாருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐ.ஜ.தள எம்.எல்.ஏக்களில் ஜிதன் ராம் மஞ்சியை தவிர அனைவரும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக., இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை. அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இங்கே பாஜகவுக்கு 87 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பீகார் மாநில சட்டப் பேரவையில் மொத்தம் 233 உறுப்பினர்கள் உள்ளனர். வெற்றிக்கு 117 பேர் ஆதரவு இருந்தாலே போதும். இங்கே நிதிஷ் குமார் 140 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img