கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

