கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின் தமிழ் பேசும் மக்களிடம் வந்து தங்கிய இடத்துக்கு பார்வையிட வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் கோயில் சாலையில் 199ஆம் எண் இல்லம் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற ஒன்று. இந்த இல்லத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வரும் பொறியாளர் சூரியசேகரம், இந்த இல்லத்துக்கு குறைந்தது 3 நிமிடங்களாவது வந்து தனது கையெழுத்தை இங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் மோடி இட்டால் அது மிகப் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமையும் என்று கூறியுள்ளார். இந்த இடம் பழங்கால யாழ். மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றுப் பிணைப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 1927 ஆம் ஆண்டு நவம்பர் 27ல் மகாத்மா காந்தி அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியுடன் இந்த இடத்துக்கு வந்தார். அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய், ப்யாரிலால், ராஜாஜி, அவரது மகள் லக்ஷ்மி என அப்போது இங்கே வந்தனர். அவர்களை யாழ். இளைஞர் காங்கிரஸ் நிறுவனர் கண்டி பேரின்பநாயகம் வரவேற்றார். அப்போது இந்தியா இலங்கை இருநாடுகளிலும் முழு சுயராஜ்யம் வேண்டி இந்தப் போராட்டங்கள் நடந்தன. அங்கே அரசியல் தவிர்த்து, சமூக சீர்திருத்த விஷயங்களை அவர் பேசினார். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, தொண்டைமன்னார், பாய்ன்ட் பெற்றோ, மனிப்பே, சாவகச்சேரி ஆகிய இடங்களில் அவர் உரையாற்றினார்.
காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்
Popular Categories


