காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்

narendramodi கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின் தமிழ் பேசும் மக்களிடம் வந்து தங்கிய இடத்துக்கு பார்வையிட வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் கோயில் சாலையில் 199ஆம் எண் இல்லம் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற ஒன்று. இந்த இல்லத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வரும் பொறியாளர் சூரியசேகரம், இந்த இல்லத்துக்கு குறைந்தது 3 நிமிடங்களாவது வந்து தனது கையெழுத்தை இங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் மோடி இட்டால் அது மிகப் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமையும் என்று கூறியுள்ளார். இந்த இடம் பழங்கால யாழ். மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றுப் பிணைப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 1927 ஆம் ஆண்டு நவம்பர் 27ல் மகாத்மா காந்தி அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியுடன் இந்த இடத்துக்கு வந்தார். அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய், ப்யாரிலால், ராஜாஜி, அவரது மகள் லக்ஷ்மி என அப்போது இங்கே வந்தனர். அவர்களை யாழ். இளைஞர் காங்கிரஸ் நிறுவனர் கண்டி பேரின்பநாயகம் வரவேற்றார். அப்போது இந்தியா இலங்கை இருநாடுகளிலும் முழு சுயராஜ்யம் வேண்டி இந்தப் போராட்டங்கள் நடந்தன. அங்கே அரசியல் தவிர்த்து, சமூக சீர்திருத்த விஷயங்களை அவர் பேசினார். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, தொண்டைமன்னார், பாய்ன்ட் பெற்றோ, மனிப்பே, சாவகச்சேரி ஆகிய இடங்களில் அவர் உரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories