நெல்லை மாவட்டத்தில், 5 கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட சிறப்பு முகாம் 5 கிராமங்களில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி வட்டத்துக்கு உள்பட்ட கண்டியப்பேரி பகுதி-2, சங்கரன்கோவில் வட்டத்துக்கு உள்பட்ட சத்திரப்பட்டி, அம்பாசமுத்திரம் வட்டத்துக்கு உள்பட்ட இடைகால் பகுதி-1, நான்குனேரி வட்டத்துக்கு உள்பட்ட மூலைக்கரைப்பட்டி பகுதி-1, மூலைக்கரைப்பட்டி பகுதி-2 ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்பஅட்டை உள்ளிட்டவற்றுக்கு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.