ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு

மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன் ( 55) கிடாரிப்பட்டி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதி மக்கள், பொது நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தனர். சிலர் அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானமாகக் கொடுத்து பணம் பெற முன்வந்தனர். இதனால் அவர் பலசரக்குக் கடையை அடகுக் கடையாக மாற்றினர். அதை அடகுக் கடையாக மாற்ற அதற்கு முறையான அனுமதியும் பெற்றுள்ளார். இவரிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பெண்களும் பணத்தை கொடுத்து சேமித்து வந்துள்ளனர் இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ராமனின் உடல்நிலை பாதித்ததாக கூறி அவரது அடகுக் கடை மூடப்பட்டது. அப்போது, மேலூர் நீதிமன்றத்தில் இருந்து கிடாரிப்பட்டியில் சிலருக்கு தபால் வந்துள்ளது. அதில் அடகுக்கடை நடத்திய ராமன் தொழிலில் திவாலானதாக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இந்தத் தகவல் கிராம மக்களிடையே பரவியதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராமனின் கடை முன் திரண்டனர். ஆனால் கடை மூடப் பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்தனர். அ.வல்லாளபட்டியில் ராமனின் வீட்டுக்குச் சென்று பார்த்ததில், ராமனின் வீடும் பூட்டப்பட்டிருந்தது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், மொத்தம் தங்க நகைகள் மற்றும் பணத்தை சேர்த்து ரூ.1 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories