மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன் ( 55) கிடாரிப்பட்டி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதி மக்கள், பொது நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தனர். சிலர் அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானமாகக் கொடுத்து பணம் பெற முன்வந்தனர். இதனால் அவர் பலசரக்குக் கடையை அடகுக் கடையாக மாற்றினர். அதை அடகுக் கடையாக மாற்ற அதற்கு முறையான அனுமதியும் பெற்றுள்ளார். இவரிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பெண்களும் பணத்தை கொடுத்து சேமித்து வந்துள்ளனர் இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ராமனின் உடல்நிலை பாதித்ததாக கூறி அவரது அடகுக் கடை மூடப்பட்டது. அப்போது, மேலூர் நீதிமன்றத்தில் இருந்து கிடாரிப்பட்டியில் சிலருக்கு தபால் வந்துள்ளது. அதில் அடகுக்கடை நடத்திய ராமன் தொழிலில் திவாலானதாக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இந்தத் தகவல் கிராம மக்களிடையே பரவியதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராமனின் கடை முன் திரண்டனர். ஆனால் கடை மூடப் பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்தனர். அ.வல்லாளபட்டியில் ராமனின் வீட்டுக்குச் சென்று பார்த்ததில், ராமனின் வீடும் பூட்டப்பட்டிருந்தது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், மொத்தம் தங்க நகைகள் மற்றும் பணத்தை சேர்த்து ரூ.1 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

