மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன் ( 55) கிடாரிப்பட்டி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதி மக்கள், பொது நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தனர். சிலர் அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானமாகக் கொடுத்து பணம் பெற முன்வந்தனர். இதனால் அவர் பலசரக்குக் கடையை அடகுக் கடையாக மாற்றினர். அதை அடகுக் கடையாக மாற்ற அதற்கு முறையான அனுமதியும் பெற்றுள்ளார். இவரிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பெண்களும் பணத்தை கொடுத்து சேமித்து வந்துள்ளனர் இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ராமனின் உடல்நிலை பாதித்ததாக கூறி அவரது அடகுக் கடை மூடப்பட்டது. அப்போது, மேலூர் நீதிமன்றத்தில் இருந்து கிடாரிப்பட்டியில் சிலருக்கு தபால் வந்துள்ளது. அதில் அடகுக்கடை நடத்திய ராமன் தொழிலில் திவாலானதாக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இந்தத் தகவல் கிராம மக்களிடையே பரவியதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராமனின் கடை முன் திரண்டனர். ஆனால் கடை மூடப் பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்தனர். அ.வல்லாளபட்டியில் ராமனின் வீட்டுக்குச் சென்று பார்த்ததில், ராமனின் வீடும் பூட்டப்பட்டிருந்தது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், மொத்தம் தங்க நகைகள் மற்றும் பணத்தை சேர்த்து ரூ.1 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
2 min.Read
ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
விளையாட்டு
FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

