தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40 கோடி எண்ணிக்கையில் ரூ.136 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும், தற்போது(2014-15) 71 கோடி எண்ணிக்கையில் ரூ.190 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும் புழக்கத்தில் விட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில்(2015-16) 90 கோடி எண்ணிக்கையில் ரூ.250 கோடி மதிப்பில் சில்லரை காசுகளை புழக்கத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப சில்லரை காசுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எக்ஸ்சேன்ஜ் மேளா மூலமாகவும் சில்லரை காசுகள் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து சில்லரை காசுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று வியாபார சங்கங்களையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே சில்லரை தட்டுப்பாடு என்பது செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் சில்லரை காசுகளை கையில் எடுத்து சென்றால், வியாபாரிகள் வலுக்கட்டாயமாக கொடுக்கும் சாக்லெட்டை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. என்று அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் விடப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

