February 22, 2026, 7:43 AM
25.4 C
Chennai

ஓபிஎஸ்., மற்றும் குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு! லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவு!

14 July15 high court - 2026

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவிக்கப் பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ஓபிஎஸ்., மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 3 மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை என்று கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சேகர் ரெட்டி டைரியில் ஓ.பி.எஸ். பெயர் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி மனுவில் கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்தப் புகார் மனு குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த 18ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆரம்ப கட்ட விசாரணை முடிவடைந்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒரு வாரத்தில் விசாரணையை முடித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories