குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்!

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசுவதுடன் அருவிகளில் சீராகத் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், ஆண்டுதோறும் அரசின் சார்பாக நடத்தப்படும் சாரல் திருவிழாவை வரும் 28-ம் தேதி முதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

IMG 20180725 111936 - 2026கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஸ், “சாரல் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் குற்றலாத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதனால் அங்கு வரக்கூடியவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி சமூக விரோதச் செயல் நடைபெறாதவாறு காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நன்றாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறைப் பகுதிகளில் கூடுதலாகப் பெண் காவலர்களை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து மீட்புப் பணிகளுக்கு 108 அவசர கால ஊர்தியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாகக் கூடுதல் பேருந்து வசதிகளைச் செய்திட வேண்டும். காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவுப் பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். வரும் 28-ம் தேதி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 8 நாள்கள் சாரல் திருவிழா நடைபெறும்.

அதில், கலை நிகழ்ச்சிகள், நாய் கண்காட்சி, படகுப்போட்டிகள் என நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்ய வேண்டும் இந்த விழாவில் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் விழாவுக்காக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளில் ஒவ்வொரு துறையினரும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories