December 5, 2025, 10:09 PM
26.6 C
Chennai

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்!

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசுவதுடன் அருவிகளில் சீராகத் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், ஆண்டுதோறும் அரசின் சார்பாக நடத்தப்படும் சாரல் திருவிழாவை வரும் 28-ம் தேதி முதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

IMG 20180725 111936 - 2025கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஸ், “சாரல் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் குற்றலாத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதனால் அங்கு வரக்கூடியவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி சமூக விரோதச் செயல் நடைபெறாதவாறு காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நன்றாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறைப் பகுதிகளில் கூடுதலாகப் பெண் காவலர்களை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து மீட்புப் பணிகளுக்கு 108 அவசர கால ஊர்தியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாகக் கூடுதல் பேருந்து வசதிகளைச் செய்திட வேண்டும். காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவுப் பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். வரும் 28-ம் தேதி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 8 நாள்கள் சாரல் திருவிழா நடைபெறும்.

அதில், கலை நிகழ்ச்சிகள், நாய் கண்காட்சி, படகுப்போட்டிகள் என நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்ய வேண்டும் இந்த விழாவில் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் விழாவுக்காக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளில் ஒவ்வொரு துறையினரும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories