சென்னை: சென்னை மாநகரக் காவல் துறையைக் கண்டித்து, மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை இந்து முன்னணி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்…. புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்த இருந்த இந்துக்களின் புனிதமான தாலியை கேவபப்படுத்தும் நிகழ்ச்சியை ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 10 பேரைக் கைது செய்து, இதுவரை ஜாமினில் வெளியிட தாமதப்படுத்தும் சென்னை மாநகரக் காவல்துறையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெற இருக்கிறது. இதில் மாவட்ட, மாநகர, வட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வரும் 15.3.2015 ஞாயிறு அன்று காலை 10.30 மணி முதல் இந்து முன்னணி தலைமை அலுவலக வாயில் முன்பு இந்தப் போராட்டம் நடைபெறும். மாநகரச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் தலைமையில் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் உரை நிகழ்த்துவார்.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

