மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு
தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
 மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழக அரசு வரும் மார்ச் 15ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்துவதாக அரசாணை பிறப்பித்துள்ளது.  தமிழக அரசின் இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள்  வரவேற்கிறது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அவலம் இந்தியாவில்  நீடித்து வருவது சர்வதேச அரங்கில் இந்திய அரசுக்குப் பெரும் தலைகுனிவாகும். உயர் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், மனிதக் கழிவுகளை அகற்றுவதில் உயர்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு அக்கறை காட்டாதது வேதனைக்குரியதாகும். தனிநபர் இல்லங்களில் இத்தகைய நடைமுறை நீடிப்பது ஒருபுறமிருந்தாலும், இந்திய இரயில்வே துறையில் இந்தப் போக்கு நீடிப்பது அவமானத்துக்குரியதாகும்.
அரசின் புள்ளி விவரப்படி சுமார் 3 இலட்சம் பேர் இத்தொழிலில்  ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இரயில்வே துறையில் எத்தனையோ உயர்தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செலுத்தாதது ஏன் என்று விளங்கவில்லை.
 இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாடாளுமன்றத்தில் பலமுறை வலுவாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரையில் இதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் குறிப்பிடப்படுவதோடு மட்டும் சரி. மேற்கொண்டு அரசு அதை நடைமுறைப்படுத்துவதற்காக எந்தச் செயல்திட்டங்களையும் அறிவிப்பது இல்லை.
ரயில்வே துறையின் நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையிலும் அமைச்சர் உரிய விடையளிக்கவில்லை. அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்தது.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இந்த இழிவை ஒழிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்துவரும் நிலையில், தமிழக அரசு இச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாதது ஏற்புடையதல்ல.
 உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்பாவது நடைமுறைக்குக் கொண்டுவருவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் மக்களை இந்த அவலத்திலிருந்து மீட்பதற்கேற்ற வகையில் இந்திய அரசு தீவிரமாக நடவடக்கை எடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் நிலம் கையப்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்த முனையும் இந்திய அரசு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்க முன்வராதது மிகுந்த வேதனையளிக்கிறது.
மேலும், ‘தூய்மை இந்தியா’ எனும் பெயரில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டும் இந்திய அரசு கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றிக் கவலைப்படாதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மலக் குழியில் அன்றாடம் மூழ்கி எழும் மனிதனின் வாழ்வைப் பார்த்த பிறகும் அவன் மீது கருணை காட்டுவதற்கு நெஞ்சில் ஈரமில்லாப் போக்கினையே வெளிப்படுத்துகிறது. அவனையும் மீட்பதிலிருந்துதானே தூய்மை இந்தியாவை முழுமை செய்ய முடியும்.  இல்லையேல் அது வெறும் விளம்பரத் திட்டமாகவே இருக்கும்.
எனவே, இந்திய அரசு, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடைசெய்யும் சட்டத்தை இந்தியா முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  அத்துடன், தமிழக அரசு இத்திட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories