காரைக்கால்: இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் 43 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்து சேர்ந்தனர். பிப்.26,27-ல் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 86 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களின் 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் மோடியின் இலங்கைப் பயணத்தை முன்னிட்டு, கைதான மீனவர்கள் அனைவரையும் அதிபர் சிறிசேனா உத்தரவுப்படி, இலங்கை அரசு விடுவித்தது. அவர்களில் நெடுந்தீவு அருகே பிடிபட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள், பருத்தித்துறை நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் நேற்று காலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை 2 கப்பல்கள் மூலம் இந்திய கடற்படையினர் நேற்று மாலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வந்து தமிழக, காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மீனவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 43 மீனவர்கள் மார்ச் 17-க்குள் காரைக்காலுக்கு வந்து சேருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 43 பேர் காரைக்கால் வந்தனர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

