சென்னை: ரயிலில் செல்போனை சார்ஜில் போட முயன்றபோது கால் இடறி கீழே விழுந்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் பலியானார். சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ரேணுகா தேவி தம்பதியின் ஒரே மகன் எழில்நம்பி (34). ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் படிப்பு படித்து வந்தார். மைசூரில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸில் சென்றார். அவருடன் அவரது நண்பர்களும் சென்றனர். அதிகாலை 2 மணி அளவில் ரயில் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கத்தில் சென்றபோது, செல்போனுக்கு சார்ஜ் போட ரயிலின் கதவு அருகே சென்றார் நம்பி. அப்போது கால் தடுக்கி அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், உடனே சங்கிலியைப் பிடித்திழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் நம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நம்பியின் உடல் நேற்று மாலை பல்லாவரத்தில் தகனம் செய்யப்பட்டது. நம்பிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
செல்போனை சார்ஜ்போட முயன்ற போது ரயிலில் தவறி விழுந்த டாக்டர் மரணம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

