கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது… “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. புலிகள் அமைப்பு மட்டுமல்லாது மற்ற சில அமைப்புகளும் என்னை மிரட்டி வருகின்றன. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். அரசு என்னை விரட்டி விரட்டித் துன்புறுத்துகிறது. அமெரிக்கா சென்றாலும் அங்கே புலிகள் என்னைக் கொன்று விடுவார்கள். இதுவரை நான் எந்தக் கட்சியிலும் இருந்ததில்லை. வருங்காலத்தில் நான் அரசியல் கட்சியில் சேரக்கூடும்” என்றுள்ளார். இலங்கையில் அரசுப் பணியாற்றிய போது கோத்தபய ராஜபட்ச மேற்கொண்ட சட்டரீதியான செயல்களுக்கு இப்போது குற்றம் கற்பிக்கப் படுவதாக புகார் கூறியுள்ளார் அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபட்ச. மேலும், ஒரு முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்த அவர் தனது கடமையைத்தான் செய்துள்ளார். ஆனால் அவர் எடுத்த முடிவுகள் குறித்து இப்போது கேள்வி எழுப்பப் படுகிறது என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபட்ச.
அமெரிக்கா சென்றாலும் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து: கோத்தபய ராஜபட்ச
Popular Categories


