அமெரிக்கா சென்றாலும் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து: கோத்தபய ராஜபட்ச

Published:

gothapaya-rajapaksha கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது… “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. புலிகள் அமைப்பு மட்டுமல்லாது மற்ற சில அமைப்புகளும் என்னை மிரட்டி வருகின்றன. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். அரசு என்னை விரட்டி விரட்டித் துன்புறுத்துகிறது. அமெரிக்கா சென்றாலும் அங்கே புலிகள் என்னைக் கொன்று விடுவார்கள். இதுவரை நான் எந்தக் கட்சியிலும் இருந்ததில்லை. வருங்காலத்தில் நான் அரசியல் கட்சியில் சேரக்கூடும்” என்றுள்ளார். இலங்கையில் அரசுப் பணியாற்றிய போது கோத்தபய ராஜபட்ச மேற்கொண்ட சட்டரீதியான செயல்களுக்கு இப்போது குற்றம் கற்பிக்கப் படுவதாக புகார் கூறியுள்ளார் அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபட்ச. மேலும், ஒரு முன்னாள் பாதுகாப்புச் செயலராக இருந்த அவர் தனது கடமையைத்தான் செய்துள்ளார். ஆனால் அவர் எடுத்த முடிவுகள் குறித்து இப்போது கேள்வி எழுப்பப் படுகிறது என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபட்ச.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img