அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன்: ஐஸ்வர்யா அர்ஜுன்

Published:

aishwarya ஒரு இனிய காலை வேலை ! அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தோம்.. “பட்டத்துயானை” படத்தின் மூலம் கதாநாயகியாக பரிவட்டம் கட்டிக்கொண்ட அவரிடம் காணப்பட்ட எளிமை அவருக்கு இன்னு வலிமை சேர்த்தது. அடுத்த படம் எப்போ? என்று கேள்வியை உதிர்க்கும் முன்னே.. அதற்குத் தான் தயாராகி கொண்டிருக்கிறேன். அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கத்து கிட்டு வர்றேன். ஏற்கனவே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் கதக் தெரியாது. மத்த டைரக்டர்ன்னா பரவா இல்லை அப்பா டைரக்ஷன்.. அவர் உருவாக்கின காரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும் இலன்னா திட்டு விழும்.அதுக்காக கத்துக்கறேன். ஒரு இடைவெளி விழுந்து விட்டது மாதிரி தெரியிதே ! இரண்டு ஹிந்தி படம் வந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல படம் வந்தால் நடிப்போம். இலன்னா வேற வேலையில கவனம் செலுத்தலாம்னு பேஷன் டிசைனிங் கத்துகிட்டேன். இப்ப அப்பா இயக்கும் படத்திற்கு நான்தான் காஸ்டியூம் டிசைனர். லண்டன்ல போய் பேஷன் டிசைனிங் படித்தது நல்லதுக்குத் தான்னு தெரிகிறது. அப்பா இயக்குற படம்னா சில நல்லது கேட்டது இருக்குமே? அப்பாங்கிறது வீட்ல.. ஷூட்டிங் ஸ்பாட்டுன்னு வந்துட்டா குரு, சிஷ்யை உறவுதான். அவர் சொல்வதை செய்து விட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல நடிகை என்று எல்லோரும் பாராட்டனும் அது தான் என் லட்சியம். அதுவும் அப்பா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் நடிக்கிறேன் ஹீரோ யார் என்று அப்பா விரைவில் அறிவிப்பார். இந்த படத்திற்காக அப்பா ஒர்க் ஷாப் வைத்து எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி அளித்து படம் எடுக்க போகிறார்.. -என்றார் ஐஸ்வர்யா.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img