விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது

Published:

chennai-fraud-ssசென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ வாசுதேவன்(46). இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்தியக் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன் மனைவி யுவராணியுடன் சேர்ந்து சென்னை திருவொற்றியூரில்2013ம் ஆண்டில் டிஆர் எஸ் காம்ப்ளக்ஸில் எஸ்.எஸ்.டிரெண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு சேவைchennai-fraud-ss2 நிறுவனம் நடத்தி வந்தார். அவர்கள், என் மகனுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். அவர்கள் சொன்ன உறுதி மொழியை நம்பி ரூ. 1.5 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் வங்கி காசோலை ஒன்றைக் கொடுத்தனர். ஆனால் அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட ராமச்சந்திரன் (30), யுவராணி(26), அவர்களது கூட்டாளிகள் கனியன் (26), ஏழுமலை(26) ஆகியோரைக் கைது செய்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img