சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாட்ஸ்அப்பில் அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அதில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரின் செல்போன்களுக்கும் வைரலாகப் பரவிவிட்டது. இந்நிலையில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் தொடர்புடைய உதவி ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது விசாரணை முடிவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப் படக்கூடும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி ஆணையர் 1987–ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். வேலூரைச் சேர்ந்த இவர், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்த ஆபாசப் பேச்சு தொடர்பாக குறிப்பிட நபர் மீது பெண் போலீஸ் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

