பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?

சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாட்ஸ்அப்பில் அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அதில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரின் செல்போன்களுக்கும் வைரலாகப் பரவிவிட்டது. இந்நிலையில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் தொடர்புடைய உதவி ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது விசாரணை முடிவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப் படக்கூடும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி ஆணையர் 1987–ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். வேலூரைச் சேர்ந்த இவர், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்த ஆபாசப் பேச்சு தொடர்பாக குறிப்பிட நபர் மீது பெண் போலீஸ் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories