பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?

சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாட்ஸ்அப்பில் அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அதில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரின் செல்போன்களுக்கும் வைரலாகப் பரவிவிட்டது. இந்நிலையில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் தொடர்புடைய உதவி ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது விசாரணை முடிவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப் படக்கூடும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி ஆணையர் 1987–ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். வேலூரைச் சேர்ந்த இவர், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்த ஆபாசப் பேச்சு தொடர்பாக குறிப்பிட நபர் மீது பெண் போலீஸ் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories