பெண் போலீசுடன் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையர், பெண் போலீஸ் இடமாற்றம்

Published:

சென்னை: சென்னையில் பெண் போலீசுடன் உதவி ஆணையர் செல்போனில் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருமே பணியிட மாற்றம்ம் செய்யப்படுள்ளனர். அந்த உரையாடலில் இருந்த பெண் போலீஸ் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை போலீஸாரிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அந்த உதவி ஆணையர், அவர் பணியாற்றிய இடத்தில் இருந்து மாற்றப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். இருப்பினும், அவரிடம் உயர் அதிகாரிகள், நண்பர்கள் இந்தப் பேச்சு குறித்து விசாரித்தபோது, செல்போனில் பேசியது நான் அல்ல என்று அவர் மறுத்துள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவோ, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவோ, உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் இதுவரை புகார் மனு எதுவும் கொடுக்கவில்லை. இருபினும், நேற்று சிவசேனா கட்சி சார்பில், உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img