2 மணிக்குள் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published:

புது தில்லி: தில்லியைச் சேர்ந்த சுரேந்தர் சர்மா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் உடனடியாக ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மதியம் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. முன்னதாக, அவர் நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறியும், ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மனிஷ் சிஷோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோரும் மதியம் 2 மணிக்குள் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஜராகாமல் இருப்பதற்கான எந்த விதக் காரணத்தையும் கூற வேண்டாம் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img