

விதிமுறைகளை மீறி பட்டாசு தொழிலாளர்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து. 6 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணிப்பாரைபட்டி விலக்கில் சரக்கு வாகனத்தில் பட்டாசு தொழிலாளர்கள் ஏற்றி வந்த வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 6 க்கும் மேற்பட்டோர் படுகாயம். சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. இதில் படுகாயமடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள முருகன் காலனி பகுதியில் இருந்து முருகன் (28) என்பவர் சரக்கு வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு சாத்தூர் அருகே சந்தையூர் கிராமத்தில் உள்ள (twin) ட்வின் விநாயகா பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பாரைப்பட்டி விளக்கு அருகே செல்லும்போது அவர் பின்னால் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34) மற்றும் நிஷான் (29) இருவரும் காரில் வந்துள்ளனர் அப்போது சரக்கு வாகனத்தை முயன்ற போது கார் இடித்ததில் லோடு சரக்கு வாகனம் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் வாகனத்தில் சென்ற பட்டாசு தொழிலாளர்கள் யாருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் இதில் படுகாயம் அடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
விபத்தில் காயமடைந்தசிவகாசி முருகன் காலனியை சேர்ந்தமுருகன் (28) டிரைவர்மணிகண்டன்(24)ஆகாஷ் (20)
முத்துமாரியப்பன் (45)ஜெயப்பிரபு (42)
முத்துமாரி(30) -பாண்டி கணேஷ் (18)
முத்துக்குமார்(20)ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





