ராஜபாளையம் -சங்கரன்கோவில் ரயில் பாதை சீரமைப்பு..

FB IMG 1662529965494 1 - 2026

மதுரை செங்கோட்டை வழித்தடத்தில் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை சீரமைத்து பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் – சங்கரன் கோவில் ரயில் வழித்தடப் பிரிவில், சோழபுரம்-கரிவலம் இடையே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த 5 கிலோமீட்டர் பகுதியும் கரிசல் மண் பகுதியாகும்.இதில் 60 கிலோ கிராம் எடை கொண்ட கான்கிரீட் கட்டைகளில் 52 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கரிசல் மண் அமைப்பு கோடைகாலத்தில் சுருங்கும் தன்மை கொண்டது.மழைக்காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது.இதனால் அந்த பகுதியில் ரயில்களை அனுமதிக்கப்பட்ட வேகமான 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க கடும் சவாலாக இருந்து வந்தது. ரயில்கள் இயக்கப்படும் போது அந்தப் பகுதியில் திடீர் அதிர்வுகள் உணரப்பட்டன.எனவே இரயில்களை பாதுகாப்பாக இயக்க அந்தப் பகுதியில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஒரு மீட்டர் ஆழமுள்ள பள்ளம் வெட்டப்பட்டு அதில் செம்மண் நிரப்பப்படும்.பின்பு அதன் மேல் சரளை கற்களுடன்கூடிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளுக்காக மதிய நேரத்தில் இயக்கப்படும் மதுரை – செங்கோட்டை – மதுரை ரயில்கள்(06663/06664) 30-செப்டம்பர்-2022 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

FB IMG 1662529972392 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories