ராணிப்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். தொடர்புடைய தோல் தொழிற்சாலையின் மேலாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. அதன் வளாகத்துக்குள் பின் பகுதியில் கழிவு நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இது தரை மட்டத்தில் இருந்து ஒன்றரை அடி நீள அகலம் கொண்ட மேடாக உள்ளது. அதன் திறந்த வாய்ப் பகுதி வழியே சென்று சுத்தப் படுத்தும் பணி நடக்கும். இந்த கழிவு நீர்த் தொட்டிக்கு தொழிற்சாலையில் உள்ள கழிவுகளும், கழிப்பறை கழிவுகளும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், இந்தக் கழிவு நீர் தேக்க தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் 3 தினக்கூலி தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டனர். சிப்காட், எமரால்டு நகர் அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜகன் என்கிற சண்முகம் (38) நேற்று பிற்பகலில் கழிவு நீர்த் தொட்டியின் துவாரம் வழியாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தொட்டிக்குள் மூழ்கி விட்டார். இதில் அவர் விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியின் துவாரம் சிறிதாக உள்ளதால் அவரால் உடனடியாக தப்பித்து வெளிவர முடியவில்லை. இதை அடுத்து சிப்காட் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை மீட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்த சண்முகம் குடும்பத்தினர், ஊர்ப் பொதுமக்கள் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலையின் மேலாளரை தேடி வருகின்றனர்.
Less than 1 min.Read
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: தோல் தொழிற்சாலை மேலாளருக்கு வலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
அரசியல்
ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
உலகம்
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
அரசியல்
ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
உலகம்
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
விளையாட்டு
ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?
சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

