ராணிப்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். தொடர்புடைய தோல் தொழிற்சாலையின் மேலாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. அதன் வளாகத்துக்குள் பின் பகுதியில் கழிவு நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இது தரை மட்டத்தில் இருந்து ஒன்றரை அடி நீள அகலம் கொண்ட மேடாக உள்ளது. அதன் திறந்த வாய்ப் பகுதி வழியே சென்று சுத்தப் படுத்தும் பணி நடக்கும். இந்த கழிவு நீர்த் தொட்டிக்கு தொழிற்சாலையில் உள்ள கழிவுகளும், கழிப்பறை கழிவுகளும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், இந்தக் கழிவு நீர் தேக்க தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் 3 தினக்கூலி தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டனர். சிப்காட், எமரால்டு நகர் அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜகன் என்கிற சண்முகம் (38) நேற்று பிற்பகலில் கழிவு நீர்த் தொட்டியின் துவாரம் வழியாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தொட்டிக்குள் மூழ்கி விட்டார். இதில் அவர் விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியின் துவாரம் சிறிதாக உள்ளதால் அவரால் உடனடியாக தப்பித்து வெளிவர முடியவில்லை. இதை அடுத்து சிப்காட் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை மீட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்த சண்முகம் குடும்பத்தினர், ஊர்ப் பொதுமக்கள் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலையின் மேலாளரை தேடி வருகின்றனர்.
3 min.Read
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: தோல் தொழிற்சாலை மேலாளருக்கு வலை
Hot this week
உரத்த சிந்தனை
வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!
ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....
சற்றுமுன்
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.
உரத்த சிந்தனை
தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!
பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...
தமிழகம்
கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை
சென்னை
717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics
உரத்த சிந்தனை
வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!
ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....
சற்றுமுன்
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.
உரத்த சிந்தனை
தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!
பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...
தமிழகம்
கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை
சென்னை
717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
News
“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye
"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur
உரத்த சிந்தனை
வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!
தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

