December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

காரியாபட்டி அருகே கல்குவாரிக்கு சீல்..

IMG 20221223 WA0093 - 2025
IMG 20221223 WA0094 - 2025

காரியாபட்டி அருகே டூ வீலரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது கிரஷர் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதிய விபத்தில் மாணவி கால் பறி போன சோகம் – பொதுமக்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வட்டாச்சியர் கல்குவாரிக்கு பூட்டி சீல் வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவ ஆதிநாராயணன் மகன் வர்கீஸ் நவீன் (16), லட்சுமணன் மகள் லாவண்யா ( 15) இரண்டு மாணவர்கள் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் இருந்து ஆவியூர் பஸ்ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து கிரஷர் ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக இரண்டு மாணவர்கள் மீது மோதியதில் மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர் .

தகவலறிந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றார். மேலும் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவருடைய கால் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரசரை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுந்து நின்றது.மேலும் சம்பவ இடத்தில் காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ எஸ் பி காரட் கரூன் உத்தராவ், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்குவாரி மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உடனடியாக அந்த கல்குவாரியை மூடியதை அடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories