காரியாபட்டி அருகே கல்குவாரிக்கு சீல்..

IMG 20221223 WA0093 - 2026
IMG 20221223 WA0094 - 2026

காரியாபட்டி அருகே டூ வீலரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது கிரஷர் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதிய விபத்தில் மாணவி கால் பறி போன சோகம் – பொதுமக்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வட்டாச்சியர் கல்குவாரிக்கு பூட்டி சீல் வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவ ஆதிநாராயணன் மகன் வர்கீஸ் நவீன் (16), லட்சுமணன் மகள் லாவண்யா ( 15) இரண்டு மாணவர்கள் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் இருந்து ஆவியூர் பஸ்ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து கிரஷர் ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக இரண்டு மாணவர்கள் மீது மோதியதில் மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர் .

தகவலறிந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றார். மேலும் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவருடைய கால் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரசரை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுந்து நின்றது.மேலும் சம்பவ இடத்தில் காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ எஸ் பி காரட் கரூன் உத்தராவ், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்குவாரி மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உடனடியாக அந்த கல்குவாரியை மூடியதை அடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories