காரியாபட்டி அருகே கல்குவாரிக்கு சீல்..

IMG 20221223 WA0093 - 2026
IMG 20221223 WA0094 - 2026

காரியாபட்டி அருகே டூ வீலரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது கிரஷர் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதிய விபத்தில் மாணவி கால் பறி போன சோகம் – பொதுமக்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வட்டாச்சியர் கல்குவாரிக்கு பூட்டி சீல் வைத்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவ ஆதிநாராயணன் மகன் வர்கீஸ் நவீன் (16), லட்சுமணன் மகள் லாவண்யா ( 15) இரண்டு மாணவர்கள் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் இருந்து ஆவியூர் பஸ்ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து கிரஷர் ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக இரண்டு மாணவர்கள் மீது மோதியதில் மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர் .

தகவலறிந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றார். மேலும் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவருடைய கால் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரசரை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுந்து நின்றது.மேலும் சம்பவ இடத்தில் காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ எஸ் பி காரட் கரூன் உத்தராவ், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்குவாரி மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உடனடியாக அந்த கல்குவாரியை மூடியதை அடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories