நெல்லை:- திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையம் உள்ளது. அங்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய பணிகளை ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராக்கெட் ஏவுதளம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணையின் 4வது கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. மொத்தம் 11 கட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளன. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு அடுத்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் அந்த ஏவுகணை விண்ணில் ஏவப்படும். என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
To Read this news article in other Bharathiya Languages
ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் ஆய்வு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari