நெல்லை:- சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் சிறந்த சேவைக்கான மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013–2014 ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் படிக்கும் மாணவி ரீட்டாவுக்கு சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தொண்டருக்கான மாநில விருது கிடைத்துள்ளது. இந்த விருதை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையாளர் பிரவீன்குமார் வழங்கி பாராட்டினார். விருது பெற்று சாதனை படைத்த மாணவி ரீட்டாவை கல்லூரி தலைவர் பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

