கடன் தொல்லை: சிறுமிகள் இருவர் விஷம் கொடுத்துக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் முல்லாபாளையம் தெருவில் வசிக்கும் பழனி என்பவரது மகன் வெங்கடேசன் (35). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு கோமதி (9), கவிமதி (10) என 2 மகள். சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கோமதி 5-ம் வகுப்பும், கவிமதி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெங்கடேசன் சொந்தமாக வாடகைக்கார் ஓட்டினார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே பலரிடம் வாங்கிய கடனாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேசனும் அம்முவும், குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் 2 மகள்களுக்கும் விஷ விதையை அரைத்து கொடுத்து குடிக்கச் செய்தனர். பின்னர் தாங்களும் விஷத்தை குடித்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்து, வாயில் நுரை தள்ளியபடி வீட்டுக்குள் கிடந்தனர். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும், உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் கவிமதி, கோமதி ஆகியோர் இறந்தனர். வெங்கடேசன், அம்மு இருவரும் உயிர்பிழைத்து, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories