கடன் தொல்லை: சிறுமிகள் இருவர் விஷம் கொடுத்துக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் முல்லாபாளையம் தெருவில் வசிக்கும் பழனி என்பவரது மகன் வெங்கடேசன் (35). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு கோமதி (9), கவிமதி (10) என 2 மகள். சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கோமதி 5-ம் வகுப்பும், கவிமதி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெங்கடேசன் சொந்தமாக வாடகைக்கார் ஓட்டினார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே பலரிடம் வாங்கிய கடனாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேசனும் அம்முவும், குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் 2 மகள்களுக்கும் விஷ விதையை அரைத்து கொடுத்து குடிக்கச் செய்தனர். பின்னர் தாங்களும் விஷத்தை குடித்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்து, வாயில் நுரை தள்ளியபடி வீட்டுக்குள் கிடந்தனர். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும், உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் கவிமதி, கோமதி ஆகியோர் இறந்தனர். வெங்கடேசன், அம்மு இருவரும் உயிர்பிழைத்து, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories