December 5, 2025, 9:00 PM
26.6 C
Chennai

தஞ்சை கோயிலில் ரூ.100 கோடி மதிப்பில் பஞ்ச லோக சிலைகள் கொள்ளை!

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை போனதும் சிலைகள் பல காணாமல் போயுள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் தமிழக பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகத் திகழும் இதனை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டியுள்ளான். தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப் படும் இந்தக் கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

இந்தக் கோவிலுக்கு 13 பஞ்ச லோக சிலைகளை பொய்கை நாட்டைச் சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜ சோழன் சிலையும், 55 செ.மீ. உயரமுள்ள பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும் சிறப்பானவை. இந்த இரு சிலைகளும் காணாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் விசாரித்ததில் அது உண்மை என தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 பஞ்சலோக சிலைகளும் ரூ.100 கோடி மதிப்புடையவை என்று கூறப் படுகிறது.

இதனிடையே, சிலைகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்த வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராமன், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் தஞ்சைக்கு வந்து இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கொள்ளை போன சிலைகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன. அந்தச் சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள கௌதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவற்றை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

மேலும் இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, பெரிய கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் இருந்த மேலும் பல சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories