நீங்க அழகா இருக்கீங்க!: பெண் பத்திரிகையாளரிடம் ‘உளறி’ வாங்கிக் கட்டிய விஜயபாஸ்கர்!

 

c vijayabhaskar - 2026

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ஒரு  பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்,  அவர் அழகாக இருப்பதாகவும் அவர் தோற்றத்தைப் பற்றியே கூறியதும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்திற்குப் பின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், அதைத் தொடர்ந்து நேற்று  மாலை அதிமுக., எம்எல்ஏ.,க்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்பட்டது என ஒரு பெண் செய்தியாளர் கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், அவரை தவிர்க்கும் நோக்கிலேயே கடந்து சென்றார். ஆனால் விடாமல் அந்தப்  பத்திரிக்கையாளர் துரத்திக் கேட்க, அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவருடைய கண்ணாடி அழகாக உள்ளது எனவும், அவர் அழகாக இருப்பதாகவும் அவர் தோற்றத்தைப் பற்றியும் பதில் கூறி விலகிச் சென்றார்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

ஆனால் அந்தப் பெண் பத்திரிக்கையாளரோ அவரை விடாமல் மேலும் துரத்தி, பலமுறை அந்தக் கூட்டத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய போதும், அமைச்சர் தொடர்ந்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று அதையே மூன்று முறை கூறிவிட்டுச் சென்றார். இது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்படி, ஊடகங்கள் முன்னிலையில், அமைச்சர் ஒருவர் பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த விஜயபாஸ்கர், தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், அனைத்து பத்திரிகையாளர்களையும் சகோதர சகோதரியாகவே நான் பார்க்கிறேன் என்றும் பதில் கூறினார் விஜயபாஸ்கர். இதை பெரிய விவகாரம் ஆக்காதீர்கள், அனைவருடனும் நான் நன்கு பழகி வருகிறேன் என்று கூறியவர், தன்னிடம் கேட்கப்பட்ட  அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே அவ்வாறு கூற முற்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

தனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன், குறிப்பிட்ட அந்த சகோதரியிடமே பேசிவிட்டேன் என்றும் கூறினார்.,

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆனாலும், விடாமல் அரசியல் குறித்த கேள்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால், நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்வது எப்படி ஒரு பொறுப்பான பதிலாகும் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  டாக்டர் சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories