ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் மனு: காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவு

Madras High Court in Chennai - 2026

சென்னை: பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா, தான் சார்ந்த ஹிந்து மத மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி வருகிறார். அது வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், அவரைக் கைது செய்து மன நல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி, போலீஸில் புகார் அளிக்கப் பட்டது. அந்தப் புகார் குறித்து இன்று அளிக்கப்பட்ட மனு மீது விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போலீஸார் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

ஹெச்.ராஜா, தான் சார்ந்த ஹிந்து மத உரிமைக்காகவும், தான் சார்ந்த சமூக உரிமைக்காகவும் அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருவதுண்டு. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துதல், கிறிஸ்துவ மதமாற்றம், பன்றிக்குப் பூணூல் போடுதல், பூணூல் அறுப்பு, கொலைவெறித் தாக்குதலில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை துன்புறுத்துதல் என்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் சிலர் செய்யும் செய்கைகளை கண்டித்து தனது டிவிட்டர் பதிவுகளில் கருத்து வெளியிட்டு வந்தார். இவை குறித்து மேடைகளிலும் பேசி வருகிறார். இவற்றை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள இயலாத எதிர் அமைப்பினர், சாதீய ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இந்நிலையில், அண்மையில் பெரியார் சிலை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகக் கூறி, அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தப் பின்னணியில், ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரி சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்று கொடுக்கப் பட்டது.

மேலும் சென்னை காவல் துறை ஆணையரிடமும் இது போன்ற புகார் கொடுக்கப் பட்டது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால், அதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவதால், பொது அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நபர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஹெச்.ராஜாவை கைது செய்து உரிய மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி மார்ச் 7ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சம்மந்தப்பட்ட காவல் துறையினரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories