December 6, 2025, 2:59 AM
24.9 C
Chennai

36 ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகள்: உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

madurai high court - 2025

மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பழனி மலை அடிவாரத்தில் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான திருக்கோவிலுக்குச் சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளைக் காலி செய்யுமாறு, கோவில் இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அந்த இடத்தில் கடை வைத்திருந்த 7 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை எடுத்துக் கொண்ட நீதிபதி சுப்பிரமணியம், அவற்றைத் தள்ளுபடி செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் தொடர்ந்து கடைகளை நடத்த வேண்டும் என்று கேட்க எந்த சட்ட உரிமையும் இல்லை என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்கள் அனைத்தையும் பராமரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நீதிபதி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வளாகங்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும், அறநிலையத் துறைச் செயலர், அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories